5 மாநில இடைத்தேர்தல்: ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை..!
மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு, கேரளாவின் நிலம்பூர், குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலிகஞ்சில் 70% வாக்குப்பதிவும், நிலம்பூரில் 73.26% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. குஜராத்தில் 54% வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், லூதியானா மேற்கில் 51.33% மட்டுமே வாக்குகள் பதிவாகின, இது 2022 தேர்தலை விடக் குறைவு.
காலிகஞ்சில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் விஸ்வதாரில் ஆம் ஆத்மி கட்சியும், காடியில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளன. கேரளாவில் நிலம்பூரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாபின் லூதியானா மேற்கில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும்.
Edited by Siva