1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜூன் 2025 (09:42 IST)

பங்குச்சந்தை உயர்ந்தாலும் நம்பிக்கையில்லாத முதலீட்டாளர்கள்.. மதியத்திற்கு மேல் என்ன நடக்குமோ?

share
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஏற்றம் கண்டு, பின்னர் மதியத்திற்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றும் காலை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்கள் கவனத்துடனும், நம்பிக்கையின்றியும் வர்த்தகத்தை பார்க்கின்றனர்.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து 81,538 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 24,840 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏற்றம் கண்ட பங்குகள்:
 
அப்போலோ ஹாஸ்பிடல்
ஆசியன் பெயிண்ட்
ஆக்ஸிஸ் வங்கி
பாரதி ஏர்டெல்
சிப்லா
டாக்டர் ரெட்டி
எச்டிஎஃப்சி வங்கி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ வங்கி
ஐடிசி
பாரத ஸ்டேட் வங்கி
சன் பார்மா
டாடா ஸ்டீல்
டிசிஎஸ்
 
இன்றைய பங்குச்சந்தையில் சரிந்த பங்குகள்:
 
டாடா மோட்டார்ஸ்
இன்போசிஸ்
இண்டஸ்இண்ட் வங்கி
ஹீரோ மோட்டார்ஸ்
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
 
 
Edited by Siva