ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்திக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால், அவர்களின் கணிப்புக்கு மாறாக, இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,700 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 190 புள்ளிகள் உயர்ந்து 24,908 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், சிப்லா, எச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஐடிசி, இண்டஸ் வங்கி உள்ளிட்ட பல முன்னணி பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன. அதேசமயம், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, ஜியோ பைனான்ஸ், டாக்டர் ரெட்டி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட சில பங்குகளின் விலைகள் சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Siva