1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
  4. How to make delicious fruit cashews pulao rice

ருசியான பழ முந்திரி புலவு செய்வது எப்படி?

Fruit Pulao
பழங்களை கொண்டு செய்யப்படும் புலவு சாதம் நல்ல ருசியோடு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. சுவையான பழ முந்திரி புலவு செய்வது எப்படி என பார்ப்போம்.


 
  • தேவையானவை: பாசுமதி அரிசி, முந்திரி, பாதாம், அன்னாசி பழம், ஆப்பிள், சர்க்கரை, குங்குமப்பூ, பச்சை மிளகாய், உப்பு
  • தாளிப்பதற்கு: பட்டை, இலவங்கம், ஏலக்காய், நெய், கருஞ்சீரகம்
  • பாதம், முந்திரியை நீளமாகவும், பழங்களை பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாசுமதி அரிசியை ஊறவைத்து உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் நெய்யை ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • சர்க்கரை உருகி வரும்போது தாளிக்கும் பொருட்களை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும்.
  • பின்னர் பாதாம், முந்திரி, பச்சை மிளகாயை போட்டு பின்னர் பழங்கள், குங்குமப்பூவை போட்டு கிளற வேண்டும்.
  • பின்னர் பாஸ்மதி அரிசியை அதில் கொட்டி கிளறி கொஞ்ச நேரம் தம் கட்டினால் சுவையான பழ முந்திரி புலாவ் ரெடி.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் 20 கோடியாக உயர்வார்கள்! – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!