1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (19:04 IST)

பழனியில் வைகாசி விசாகம்: 10 நாட்களும் திருவிழாக்கள் கொண்டாட்டம்..!

palani temple
ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வைகாசி விசாகத் திருவிழா பெருமிதம் தரும் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
 
இந்த ஆண்டின் விழா ஜூன் 3ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இதையடுத்து 10 நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
 
விழா நாட்களில், வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, வெள்ளியானை, தங்கமயில், காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் ஊர்வலம் வருவார்.
 
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜூன் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 9ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு விசாகத் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
 
திருவிழா நாள்களில், பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவுகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பாரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
 
 
Edited by Mahendran