1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 ஜூன் 2025 (07:59 IST)

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்துக்கு நெருங்கியுள்ளோம். ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இதுவரை கோப்பை வெல்லாத அணிகள் என்பதால் கோப்பை வெல்லாத ஒரு அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிக் கோப்பை வெல்லாத அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இந்நிலையில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருக்கும் யஷ்வேந்திர சஹால் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாஹல் இதுவரை இரண்டு முறை இரண்டு அணிகளுக்காக ஐபிஎல் இறுதிப் போட்டி ஆடியுள்ளார். ஆனால் அந்த இரண்டு முறையுமே அவர் விளையாடிய அணித் தோற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காகவும், 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் அவர் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்.