PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.
இந்த தாக்குதலால் இரு நாட்டுக்கும் இடையே போர் வந்துவிடுமோ என்று பலரும் அச்சப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதலைத் தொடங்க, இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்து வந்த PSL தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மாற்றியுள்ளது. இதே போல இந்தியாவில் நடைபெறும் IPL தொடரும் தள்ளிவைக்கப்படலாம் அல்லது வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.