1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜூன் 2025 (14:06 IST)

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன் என கூறிய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர், கடந்த மாதம் “இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்” என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், இவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாகவும், இவருடைய உடல் பஹவல்பூர் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.
 
தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தீவிரவாதிகளும் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran