1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 15 ஜூன் 2025 (10:25 IST)

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

IDF Map controversy

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேல் செய்த ஒரு சிறு தவறுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

 

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை இஸ்ரேல் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சமீபத்தில் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அடியாக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

 

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஒரு மேப்பையும் வெளியிட்டது. அந்த உலக மேப்பில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகள் என இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய நெட்டிசன்கள் பலர் அந்த பதிவிலேயே கமெண்டில் இதுகுறித்து சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அந்த பதிவையே இஸ்ரேல் ராணுவப்பிரிவின் எக்ஸ் தள நிர்வாகம் நீக்கியுள்ளது. 

 

இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ”எல்லைகளை சரியாக கவனிக்காததன் தோல்வி இது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து IDF (Israeli Defence Force) வெளியிட்டுள்ள பதிவில் “இந்தப் பதிவு இந்தப் பகுதியை விளக்குகிறது. இந்த வரைபடம் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டது. இந்தப் படத்தால் ஏற்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது.

 

Edit by Prasanth.K