1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2025 (11:13 IST)

லாட்டரியில் விழுந்த ரூ. 2,120 கோடி பரிசு! யாருக்கு விழுந்தது என கண்டிபிடிக்க முடியவில்லையா?

lottary
அயர்லாந்து லாட்டரியில் ஒரே ஒரு டிக்கெட்டில்,  208 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 2,120 கோடி) பரிசை வென்று, நாட்டின் மிகப்பெரிய லாட்டரி வெற்றியாக பதிவாகியுள்ளது. 
 
ஐரிஷ் தேசிய லாட்டரி இந்த மாபெரும் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. தங்கள் டிக்கெட்டுகளை சரிபார்க்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த ஒரு வெற்றியின் மூலம், இதுவரை அடையாளம் காணப்படாத அந்த அதிர்ஷ்டசாலி, இங்கிலாந்தின் முன்னணி பிரபலங்களான கால்பந்து வீரர் ஹாரி கேன் மற்றும் பாப் பாடகி துவா லிபா ஆகியோரின் சொத்து மதிப்பை விட அதிக பணத்துடன், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
 
வெற்றியாளரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஐரிஷ் தேசிய லாட்டரி தலைமை செயல் அதிகாரி சியான் மர்பி, வெற்றி பெற்றவர்கள் உடனடியாக தங்கள் டிக்கெட்டுகளை சரிபார்த்து, கையெழுத்திட்டு பத்திரப்படுத்த வேண்டும் என்றும், லாட்டரி தலைமையகத்தை தொடர்புகொண்டு பரிசுத் தொகையை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
"வெற்றி பெற்ற டிக்கெட் வாங்கப்பட்ட இடம் விரைவில் வெளியிடப்படும். இவ்வளவு பெரிய வெற்றி என்பதால், வெற்றியாளர்கள் அமைதியாக இருந்து, சட்ட மற்றும் நிதி ஆலோசனைகளை பெற்று, விரைவாக எங்களை தொடர்புகொள்ள வேண்டும்," என்று சியான் மர்பி மேலும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran