புதன், 8 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2025 (15:58 IST)

சுந்தர் சி & கார்த்தி இணையவிருந்த படம் கைவிடப்பட்டதா?

சுந்தர் சி & கார்த்தி இணையவிருந்த படம் கைவிடப்பட்டதா?
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுந்தர் சி ஒரு வெற்றிகரமான இயக்குனராக உள்ளார். கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான், அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வரும் சுந்தர் சி அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இருவரும் இது சம்மந்தமாக சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இந்த படத்தை கார்த்தியின் நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவலின் படி அந்த படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.