1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 15 ஜூன் 2025 (17:15 IST)

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

இந்தியத் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஜொனிதா காந்தி, சமூக வலைத்தளங்களில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். 
 
கனடாவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, உருது என பல்வேறு மொழிகளில் தன் குரலால் ரசிகர்களை வசீகரித்துவருகிறார்.
 
மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' படத்தில் “மெண்டல் மனதில்” பாடல் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த ஜோனிடா, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து 'செல்லம்மா', 'அரபிக்குத்து' போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் மேலும் புகழ்பெற்றார். தற்போது திரைப்பட பாடல்களுடன், உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
 
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தனது கசப்பான அனுபவங்களை ஜொனிதா பகிர்ந்து கொண்டார். "ஒருமுறை இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஸ்டோரியைக் கண்டேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது," என்று அவர் விவரித்தார்.
 
"இதுபோன்றவர்களை நான் உடனடியாக முடக்கிவிடுவேன். இத்தகைய சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதால், யாரும் மீது வழக்கு தொடரவில்லை. ஆனால், இவை அனைத்தும் பாலியல் சீண்டல்கள்தான். இதுபோல பலர் எனக்கு தொல்லை கொடுத்துள்ளனர்," என்று ஜொனிதா காந்தி வேதனையுடன் தெரிவித்தார்.
 
Edited by Siva