கமல்ஹாசன் நிறுவனத்துக்குப் படம் இயக்குனர் அருண்குமார்… ஹீரோ யார்?
பண்ணையாரும் பத்மினியும் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் அருண்குமார். அதன் பின்னர் அவர் இயக்கிய சேதுபதி படம் வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் அதே கூட்டணியில் மீண்டும் அவர்கள் இணைந்த சிந்துபாத் படுதோல்வி படமாக அமைந்தது.
இதன் பின்னர் சித்தா படம் மூலமாக அவர் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பாராட்டுகளைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை. இதையடுத்து அருண்குமார் அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. சித்தா படம் பார்த்த போதே கமல்ஹாசன் அருண்குமாரை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.