ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் நடிப்பில் உருவான பாகுபலி படங்கள் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தன.
அதன் பின்னர் அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. அதற்கு அவரின் உடல் எடை அதிகமானதுதான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது காத்தி திரைப்படம். இந்த படத்தை கிரிஷ் இயக்க விக்ரம் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதே நாளில்தான் ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்துள்ள தி கேர்ள் பிரண்ட் படமும் ரிலீஸாகவுள்ளது. இரண்டு முன்னணி நடிகைகளின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.