1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 ஜூன் 2025 (08:37 IST)

மூன்று நாளில் இத்தனைக் கோடி வசூலா?... படை தலைவன் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ’படை தலைவன்’ திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பிறகு தற்போது ரிலீஸாகியுள்ளது.  இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான  நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் படத்துக்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் செல்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் மறைந்த விஜயகாந்தின் ரசிகர்கள். ஏனென்றால் இந்த படத்தில் விஜயகாந்தை ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக மீளுருவாக்கியுள்ளனர். ஏற்கனவே விஜய்யின் கோட் படத்திலும் இதுபோல் விஜயகாந்த் சம்மந்தப்பட காட்சிகள் இருந்தன.

இந்நிலையில் இந்த படம் கௌரவமான வசூலைப் பெற்று வருகிறது. மூன்று நாளில் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது ‘படை தலைவன்’ 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் லாபம் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கு மூலமாக 10 கோடி ரூபாயாவது ஈட்ட வேண்டும். அதை படை தலைவன் ஈட்டுமா என்பது இந்த வாரத்தில் ரசிகர்களின் ஆதரவு படத்துக்குக் கிடைப்பதைப் பொறுத்துதான் உள்ளது.