மீண்டும் தொடங்கும் ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்… புறப்பட்ட ரஜினி!
தன்னுடைய 74 ஆவது வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
கூலி ரிலீஸுக்கு முன்புவரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஜெயிலர் 2 ஷூட்டிங்குக்கு இடைவெளி விடப்பட்டிருந்தது. தற்போது பாலக்காட்டில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் ரஜினிகாந்த் பாலக்காடு புறப்பட்டு சென்றுள்ளார்.