1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஜூன் 2025 (11:52 IST)

நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

நடிகைகள் என்றாலே பலரும் தவறாக நடந்துக் கொள்ள முயல்வதாக நடிகை நித்யா மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழில் வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நித்யா மேனன். மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ள நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் புகழ்பெற்றுள்ளார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த நிலையில், அதை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் ‘இட்லி கடை’, விஜய் சேதுபதியுடன் ‘தலைவன் தலைவி’ என பல படங்களில் நடித்து வருகின்றார்.

 

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நித்யா மேனன் “பெரும்பாலான ஆண்கள் சாதாரண பெண்களிடம் நடந்துக் கொள்வது போல, நடிகைகளிடம் நடந்துக் கொள்வதில்லை. நடிகைகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் பலரும் எங்களுக்கு கைக் கொடுக்கவும், ஒட்டிக் கொண்டும் உரசிக் கொண்டும் போட்டோ எடுக்கவும் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண பெண்களிடம் இதுபோன்ற செயல்களை அவர்கள் செய்வதில்லை.

 

நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என நினைக்கிறார்கள். அப்படி சுலபமாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மைகளா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Edit by Prasanth.K