1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 ஜூன் 2025 (08:45 IST)

நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் பிடிக்கும்… ஆனால்?- தனுஷ் மனம்திறப்பு!

நடிகர் தனுஷின் நேரடி இரண்டாவது தெலுங்கு படமாக சேகர் கமுலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிக மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் நாளை (ஜூன் 20 ஆம் தேதி) படம் ரிலீஸாகிறது.

இதையடுத்துப் படத்தைப் ப்ரமோட் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் ” எனக்கு நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் பிடிக்கிறது. ஆனால் ரசிகர்கள் என் படங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். இல்லையென்றால் எப்போதோ நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேரமும் இயக்குனர் ஆகியிருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

50 படங்களுக்கு மேல் நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கும் தனுஷ் இப்படி பேசியிருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.