புதன், 26 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (08:08 IST)

நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கேரளாவில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தித் தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், ஐடி ஊழியர்கள் அடங்கிய மற்றொரு குழுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு பிறகு, ஐடி ஊழியர் ஒருவரை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இந்த கடத்தலின்போது நடிகையும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
 
தாக்குதலுக்கு உள்ளான ஐடி ஊழியரின் நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன் மற்றும் அனீஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
நண்பர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானார். இதை கண்டறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர்.
 
இந்த சூழ்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva