கூகுள் அல்லது AI-யை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.. ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!
புதிதாக பணியில் சேர்ந்த 2,715 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர், ஆசிரியர்களை வெறும் பாடங்களை சொல்லித்தரும் நபர்களாக பார்க்காமல், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் சிற்பிகளாக கருத வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்கள் எல்லாவற்றிற்கும் கூகுள் அல்லது AI-யை சார்ந்திருக்கக் கூடாது. தொழில்நுட்பத்திற்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆசிரியர்கள் புரிய வைக்க வேண்டும்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பால், அறம், நேர்மை, சமூக ஒழுக்கம் போன்ற நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களுடன் நண்பர்களாக பழகி, அவர்களது உடல் மற்றும் மன நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் சாதிய, பாலினப் பாகுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு.
இந்த அறிவுரைகள், வெறும் கல்வி அறிவை மட்டும் போதிக்காமல், மாணவர்களை முழுமையான மனிதர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்துகின்றன.
Edited by Mahendran