புதன், 1 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (11:11 IST)

எனது மனதின் குரலாக பேசியுள்ளார்.. செங்கோட்டையன் பேட்டி குறித்து ஓபிஎஸ் கருத்து..!

எனது மனதின் குரலாக பேசியுள்ளார்.. செங்கோட்டையன் பேட்டி குறித்து  ஓபிஎஸ் கருத்து..!
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் இன்றைய பேட்டி  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைகளில் தான் கலந்துகொள்ள வேண்டுமென்றால், தனது கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று அவர் விதித்துள்ள நிபந்தனை, அ.தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பூசல்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
 
செங்கோட்டையனின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் "செங்கோட்டையன் எனது மனதின் குரலாக பேசியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
 
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ள நிபந்தனை விதித்துள்ளது, அ.தி.மு.க.வில் நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. இது கட்சிக்குள் ஒருசில தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதன் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
 
"எடப்பாடி பழனிசாமிக்குக் கூடும் கூட்டம் வேறு, அ.தி.மு.க. தொண்டர்களின் மனநிலை வேறு" என்று செங்கோட்டையன் கூறியது, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பிளவுபடுத்தும் ஒரு கருத்தாகப் பார்க்கப்படுகிறது. இது, கட்சி தொண்டர்கள் ஒரு பிரிவின் பக்கம் மட்டுமே இல்லை என்பதை குறிக்கிறது.
 
செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் இந்த அதிருப்தி, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்று சேர்ப்பதற்கு பதிலாக, மேலும் சிதறடிக்கும் வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran