மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கினாரா திமுக நிர்வாகியின் உதவியாளர்? கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!
கிருஷ்ணகிரியில், திமுக மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லாம் ரகுமான் ஷெரீஃப் என்பவரின் உதவியாளர், ஒரு மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞரை புகார் கொடுக்காமல் தடுக்க, காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் திமுக நிர்வாகி அஸ்லாம் ரகுமான் ஷெரீஃப் இருவரும் தலையிட்டு, பஞ்சாயத்து பாணியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியபோது, இது ஒரு பெரிய சட்டப் பிரச்சினையாக மாறும் என்று அவர்கள் என்னிடம் கூறினர். அவர்கள் சொன்னபடி ஒரு கடிதம் எழுத சொல்லி, அதை பறித்துக்கொண்டனர். பின்னர், புகாரை திரும்ப பெறுவதற்காக என்னை காவல் நிலையத்திற்கு அனுப்பினர். அதன்பின், அஸ்லாம் அலி எனக்கு ₹10,000 கொடுத்தார். கடந்த 7-8 நாட்களாக நான் மிகுந்த மன வேதனையில் இருந்தேன். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது. அவர்கள் எனக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுத்தனர்" என்று பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் போலீஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Edited by Mahendran