கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!
கணவன், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர்களுக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருப்பதை அடுத்து, கணவன், குழந்தைகள், மாமனார், மாமியாரை விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்ததாக 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் அனைவரையும் கொல்வதற்காக உணவில் விஷம் கலந்ததாகவும், உணவை சாப்பிட்ட அனைவரும் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் பிழைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து, அவரது கணவர் மனைவியின் மொபைல் ஃபோனை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமான சில ஸ்டேட்டஸ்கள் இருந்ததாகவும், தனது மனைவிக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
இதனை அடுத்து, அவர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில், தனது குடும்பத்தை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரது கள்ளக்காதலன் யார் என்பதையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலை முயற்சிக்கும் கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப்பற்றி விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran