மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்த ஒரு தம்பதி அந்நகரின் மோசமடைந்து வரும் காற்று மாசு காரணமாக தங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதால், பெங்களூருவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று வைரலாகி, சமூக வலைத்தள பயனர்களிடையே கலவையான கருத்துக்களை பெற்றுள்ளது.
"நீங்கள் எங்களை வெறுக்கலாம், ஆனால் பெங்களூரு மெதுவாக எங்களை கொன்று கொண்டிருக்கிறது, அதை யாரும் உணருவதில்லை," என்று 27 வயதான "கார்ப்பரேட் துறையில் பணிபுரியும்" தம்பதியினர் தங்கள் வீடியோவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தத் தம்பதி, பெங்களூருவில் ஒரு வணிகம் நடத்தி வருவதாகவும், ஆனால் நகரின் வானிலை அருமையாக இருப்பதாக பலர் கூறினாலும், காற்று மாசு தங்கள் ஆரோக்கியத்தை பாதித்ததாகவும் தெரிவித்தனர்.
"பெங்களூருவில் சுத்தமான காற்று மற்றும் அருமையான வானிலை இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள், ஆனால் அது உண்மையா?" என்று அபர்ணா வீடியோவில் கேள்வி எழுப்பினார். பிப்ரவரி மாதத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 297 என்ற அதிர்ச்சியூட்டும் அளவைக் காட்டியதாகவும், இது "மிகவும் ஆரோக்கியமற்றது" என்ற வகையிலும், "ஆபத்தான" நிலைக்கு அருகிலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இது எங்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால், நாங்கள் பெங்களூருவை விட்டு முன்னரே வெளியேறியிருப்போம். எங்களுக்கு இந்த நகரம், மக்கள், உணவு என அனைத்தும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் சுவாசிப்பது என்னவென்று தெரியவில்லை.
"நம்ம பெங்களூரு அற்புதமான நகரம். ஒரு வணிகத்தை தொடங்குவதற்கும் இது சிறந்த இடம். ஆனால், இந்த நகரத்தில் சுகாதாரமாக வாழ முடியாது என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ ஆயிரக்கணக்கான விருப்பங்களையும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. சமூக வலைத்தள பயனர்களில் ஒரு பிரிவினர், குறிப்பாக உள்ளூர்வாசிகள், இந்த வீடியோவுக்காக தம்பதியினரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதேசமயம் மற்றவர்கள் அவர்களது கருத்தை ஆதரித்துள்ளனர்.
Edited by Mahendran