டிஎன்பிஎல் போட்டிகளில் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸை எதிர்கொண்ட திருப்பூர் தமிழன்ஸ் அணி எளிய இலக்கில் திண்டுக்கல்லை வீழ்த்தியது.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஆரம்பமே திண்டுக்கல் விக்கெட்டுகளை வீழ்த்த தொடங்கியது. திண்டுக்கல் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ஓவர்களில் அவுட் ஆக, நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய சிவம் சிங்கும், சாய் கிஷோர் வீசிய பந்தில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்தடுத்து வந்த பாபா இந்திரஜித் உள்ளிட்ட அனைவரும் சிங்கிள் இலக்க ரன்னிலேயே அவுட் ஆகி வெளியேறினர். வருண் சக்ரவர்த்தி டக் அவுட் ஆனார். அதனால் 16.2 பந்துகளிலேயே திண்டுக்கல் அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களே எடுத்தது.
இந்த எளிய இலக்கை குறி வைத்து இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் 11.5 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. ஓபனிங் ப்ளேயரான அமித் சாத்விக் 13 ரன்களில் அவுட் ஆனாலும், துஷார் ரஹேஜா (65), ராதாகிருஷ்ணன் (14) நின்று விளையாடி விக்கெட் இழக்காமல் வெற்றி பெற்றனர். இதில் திருப்பூர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் அணிக்கு எதிராக விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திருப்பூர் அணி பந்துவீச்சாளர் எசக்கிமுத்து, ப்ளேயர் ஆப் தி மேட்ச்சை வென்றார்.
Edit by Prasanth.K